முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதூரை சேர்ந்த சண்முகம், திமுக சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்... இவர் தனியார் கல்குவாரி மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கல்குவாரி அருகே சண்முகம், ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சாலவாக்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story