நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை : தேனி,சிவகங்கை கல்லூரிகளை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை

நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக, சிவகங்கை மருத்துவ கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்று, உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு எய்ம்ஸ் மாணவர்கள் சேர்க்கை : தேனி,சிவகங்கை கல்லூரிகளை பயன்படுத்தலாம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை
x
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிக இடத்தில், வெளிப்புற நோயாளிகள் பிரிவு, மற்றும் நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் அறிக்கையை, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், நடப்பாண்டு எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக, சிவகங்கை மருத்துவ கல்லூரி அல்லது தேனி மருத்துவக் கல்லூரியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எய்ம்ஸ் மருத்துவ குழுவின் அனைத்து ஆய்வுகளுக்கு முழுமையான ஆதரவு தர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்