"பாலிடெக்னிக் - விரைவில் கலந்தாய்வு தேதி"
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரம், மற்றும் இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.
இதனிடையே, 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
பிற மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இதில், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற 3 கல்லூரிகளில் 18 ஆயிரத்து 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்வதற்காக 18 ஆயிரத்து 875 மாணவர்களும், பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர ஆயிரத்து 199 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும்,கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Next Story
