ஆக்ரோஷமாக கொட்டித்தீர்த்த கனமழை - மிதக்கும் விவசாய நிலங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
x
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஆக்ரோஷத்துடன் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் புளியம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது  புளியம்பாறை ஆற்றில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கோழிகொல்லி மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்