வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....
வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பழைய இருசக்கர வாகனங்களையும் அவர் விற்று வந்தார். இதனிடையே இருசக்கர வாகனம் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக அவர் ஓஎல்எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ராதாகிருஷ்ணன் என்பவர் ரவிச்சந்திரனுக்கு போன் செய்துள்ளனர். முழு தொகையை கொடுத்துவிட்டு வாகனத்தை வாங்கிச்  செல்வதாக உறுதி அளித்துவிட்டு கடைக்கு வந்த அவர், வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்... அப்போது அங்கிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை எடுத்து ஓட்டி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன். அப்போது தன்னுடன் வந்த வெங்கடேஷை கடையில் நிறுத்தி வைத்து விட்டு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை ட்ரையல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளார். 
வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சியை போலவே, வாகனத்துடன் போனவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் அடமானத்தில் இருந்த வெங்கடேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது தான் வெங்கடேஷ் பலிகடா ஆக்கப்பட்டது தெரியவந்தது. 15 நாட்களுக்கு முன்பாக தன்னுடன் பள்ளிப்பாளையம் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தவர் தான் ராதாகிருஷ்ணன் என்றும், இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என கூறி அழைத்து வந்ததும் தெரியவந்தது. வாகனத்துடன் சென்ற ராதாகிருஷ்ணனின் பலே திட்டத்தை அறிந்து கொண்ட கடை உரிமையாளர், வெங்கடேஷையும் அழைத்துக் கொண்டு போலீசில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வாகனத்துடன் மாயமான இராதாகிருஷ்ணன் பெரம்பலூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....


Next Story

மேலும் செய்திகள்