உதவி கேட்பது போல் நடித்து போன் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் காவல்துறை விசாரணை

கவரிங் நகைக் கடையில் உதவி கேட்பது போல் நடித்து செல்போனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
உதவி கேட்பது போல் நடித்து போன் திருட்டு - சிசிடிவி காட்சி மூலம்  காவல்துறை விசாரணை
x
கவரிங் நகைக் கடையில் உதவி கேட்பது போல் நடித்து  செல்போனை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சி மூலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கவரிங் நகைக் கடையில்  மாற்றுதிறனாளி என கூறி துண்டுச் சீட்டை  கடையில் கொடுத்து மர்ம நபர் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த கடையில் பணியாற்றும் பெண்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். பெண்கள் கூறியும் அந்த நபர் அங்கிருந்து செல்லாமல் பிடிவாதம் பிடிப்பது போல் நடித்துக் கொண்டு மேஜையின் மீது வைத்திருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் மேல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்