புதையல் தேடி வீட்டில் குழிதோண்டி பூஜை - நள்ளிரவில் யாகம் நடத்தியதால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே புதையல் எடுப்பதாக, நள்ளிரவில் நடத்திய பூஜையால் பரபரப்பு ஏற்பட்டது.
x
விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  பிரபு.  மாந்திரீகத்தில் அதீத நம்பிக்கை கொண்ட இவர், வேலைக்கு செல்லாமல், அது தொடர்பான பயிற்சிகளை எடுத்து வந்தார். இதனிடையே, பரமத்தி வேலூரை சேர்ந்த மாயவன் என்ற மாந்த்​ரீகர் புதையல் இரு​ப்பதாக கூற, கடந்த 3 நாட்களாக, வீட்டினுள் குழி தோண்டியுள்ளார் பிரபு. இவருடன், வெளியங்கிரி மற்றும் துறையூரைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் குழித்தோண்டி யாகம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த டி.எஸ்.பி தலைமையிலான போலீசார், அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்