புதையல் தேடி வீட்டில் குழிதோண்டி பூஜை - நள்ளிரவில் யாகம் நடத்தியதால் பரபரப்பு
பெரம்பலூர் அருகே புதையல் எடுப்பதாக, நள்ளிரவில் நடத்திய பூஜையால் பரபரப்பு ஏற்பட்டது.
விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரபு. மாந்திரீகத்தில் அதீத நம்பிக்கை கொண்ட இவர், வேலைக்கு செல்லாமல், அது தொடர்பான பயிற்சிகளை எடுத்து வந்தார். இதனிடையே, பரமத்தி வேலூரை சேர்ந்த மாயவன் என்ற மாந்த்ரீகர் புதையல் இருப்பதாக கூற, கடந்த 3 நாட்களாக, வீட்டினுள் குழி தோண்டியுள்ளார் பிரபு. இவருடன், வெளியங்கிரி மற்றும் துறையூரைச் சேர்ந்தவர்கள் என 8 பேர் குழித்தோண்டி யாகம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த டி.எஸ்.பி தலைமையிலான போலீசார், அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Next Story