பத்திர பதிவு துறை முழுமையாக சீரமைக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

திரையரங்கம் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
x
திரையரங்கம் திறப்பு குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். 

மறைந்த நடிகர் சிவாஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரப் பதிவுத் துறையின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்றும், முழுமையாக அந்த துறை சீரமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பத்திரப் பதிவுத் துறையில் வந்துள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மூர்த்தி, எளிமையாக பத்திரப்பதிவு செய்ய, மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்