மின்வாரிய ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் - ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை

மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
x
இந்த திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் தமிழக அரசு 4 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டு காலம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும் என்றும், மின்சார வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ,இதற்காக ஒவ்வொருவரிடம் இருந்தும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும் என்றும்,இந்த திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்