9 மாத குழந்தை, இளம்பெண் மர்ம மரணம் - மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்பு

மதுரையில் ஒன்பது மாத குழந்தை மற்றும் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அருளானந்தம், சண்முகப்பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒன்பது மாதத்தில் பெண் குழந்தையும் இருந்தது. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிரான்சிஸ் அருளானந்தம் குடித்துவிட்டு, சண்முகப்பிரியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்முகப்பிரியா மற்றும் குழந்தை இருவரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்து சில மணிநேரத்தில் தாய் சண்முகப்பிரியாவும் உயிரிழந்தார். இருவருக்கும் உணவில் விஷம் வைத்து கொலை செய்திருக்க கூடும் என்று சண்முகப்பிரியாவின் பெற்றோர், மதுரை தெப்பக்குளம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்