அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு? - முதல்வரிடம் அறிக்கை அளித்த ஆணையம்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
x
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திய இந்த குழு, முதலமைச்சரிடம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. அதன்படி, தொழில் படிப்புகளில் கடந்த ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர், எந்த அளவு உள் ஒதுக்கீடு வழங்கலாம் உள்ளிட்ட அம்சங்களுடன் 86 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளனர். இதையடுத்து, ஆணையம் பரிந்துரைத்துள்ள உள் ஒதுக்கீட்டை பரிசீலித்து இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்