3 ஆண்டுகள் பணி - இடமாற்றம் செய்ய உத்தரவு

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
x
இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் நியாயவிலைக் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் இருக்கக்கூடாது எனவும்,  வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்ஒரே நியாயவிலைக் கடைகளில் பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பணிபுரிய அனுமதிக்கக் கூடாது எனவும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை அருகில் உள்ள மற்ற நியாயவிலை கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்