சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

கொரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி - எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே
x
கொரோனா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குற்றஞ்சாட்டியுள்ளார். 

மாநிலங்களவையில் பேசிய அவர், கொரோனா காலத்தில் தங்களது உயிரை தியாகம் செய்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கூறினார். ஆக்சிஜன், மற்றும் பிளாஸ்மா தானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களை விளக்கு ஏற்றி, கைத்தட்ட கூறியதாகவும், அதனை நம்பி மக்களும் அவ்வாறு செய்ததாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி, கொரோனா விவகாரத்தில் பொறுப்பேற்காமல், சுகாதார அமைச்சரை பலிகடா ஆக்கியதாகவும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புகார் கூறினார். 
===========

Next Story

மேலும் செய்திகள்