ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கைவரிசை - 45 சவரன் நகைகள், வெள்ளி, பணம் கொள்ளை

சென்னையில் ஓய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
x
நங்கநல்லூரில் ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டு விழாவுக்காக சென்ற இவர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி, 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்