"அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்" - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டடத்தை அமைச்சர் மகேஷ் பொய்யமொழி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனோ சூழலை கருத்தில் கொண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என, அமைச்சர் உறுதியளித்தார்.
Next Story