"பழுதான கட்டிடங்கள்; சீரமைக்க நடவடிக்கை" - அமைச்சர் முத்துசாமி

வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
x
வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிகளில் சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்துக்குப் புறம்பாக தவறு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்