"3 ஆம் அலையை எதிர்கொள்ள தயார்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா 3 ம் அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் கட்டமைப்புகளுடன் சிறிய மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா 3 ம் அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் கட்டமைப்புகளுடன் சிறிய மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருப்பதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் கொரோனா கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளிடம் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்துக்குள்  கொண்டு வரப்படும் என கூறினார். கொரோனா 3 ம் அலை குறித்து ஐசிஎம்ஆர் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருவதாகவும் இதற்காக அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்