மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
x
மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் உருவப்படத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட், மகாராஸ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்து வந்தவர். 2018-ம் ஆண்டு மகாராஸ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவரத்தில் இவருக்கு தொடர்புடையதாக கூறப்பட்டு, உபா சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவர் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு சென்னை லயோலா கல்லூரி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஸ்டேன் சுவாமியின் உருவப்படம் மற்றும் அஸ்திக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்