உருவாகிறது, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 21ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்