மேகதாது விவகாரம்.."அரசியலை கடந்து முடிவெடுக்க வேண்டும்" - காங்கிரஸ் எம்பி சசிதரூர் கருத்து

மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயங்களை கடந்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரம்..அரசியலை கடந்து முடிவெடுக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி சசிதரூர் கருத்து
x
மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயங்களை கடந்து மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசின் நிர்வாகத்தில், 
ஜூலை மாதத்தில் 8-வது முறையாக பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு கடந்த 2 மாதத்தில் 40 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக கூறிய சசிதரூர், கொரோனா தடுப்பு, தடுப்பூசி வழங்குவதிலும் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டதாக கூறினார். திங்கட்கிழமை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து குரல் கொடுப்போம் என்றும் சசிதரூர் தெரிவித்தார்.
தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கையும் இல்லாத சூழலில், அப்படி மாநிலத்தை பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில், அரசியலை கடந்து, இரண்டு மாநிலமும் சுமுகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும், என்று சசிதரூர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்