"கர்நாடகா முயற்சிக்கு மத்தியஅரசு துணைபோக கூடாது" - அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்

மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு துணை போக கூடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது.
x
மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு துணை போக கூடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம், தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது. 

கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு வேகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனை தடுத்திட தமிழக அரசு, கடந்த 12 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, மேகதாது திட்டத்திற்கு, அனுமதி வழங்க கூடாது என, தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்திடன், அனைத்துக்கட்சி குழு இன்று வழங்கியது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதியளித்தாக கூறினார். மேலும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு துணை போக கூடாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வலியுறுத்தியதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்