மத்திய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளின், இறக்குமதி வரிகளுக்கு விலக்கு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முதுகெலும்பு தசை செயலிழப்பு என்பது ஒரு அரிய வகை நோய் என்றும், இதற்கான மருந்துகள் விலை உயர்ந்தது என்றும் கூறி உள்ளார். சிகிச்சைக்கான மருந்துகள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மருந்துக்கான சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி, உள்ளிட்ட இதர வரிகளால், மருந்தின் விலை மிகவும் அதிகரிப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால், நோய் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் பெற்றோர் சிரமம் அடைவதாக கூறியுள்ள ஸ்டாலின், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகளின் இறக்குமதி வரிக்கு, விலக்கு அளிக்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்