4 கிராம மக்களின் பத்து ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி வைத்த எம்எல்ஏ தமிழரசி

பேருந்து வசதி கேட்டு காத்திருந்த 4 கிராம மக்களின் பத்து ஆண்டு கால கோரிக்கையை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி நிறைவேற்றி உள்ளார்.
x
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மருதங்கநல்லூர், நல்கிராமம், உத்தமனூர், பனைக்குளம் உள்ளிட்ட 4  கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ வசதி வேண்டி பரமக்குடி, இளையான்குடி செல்ல தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பயணம் செய்ய வேண்டிருந்தது. இந்நிலையில், இவர்களின் கோரிக்கையை ஏற்று, பரமக்குடியில் இருந்து மருதங்கநல்லூர் வழித்தடத்தில் பேருந்து சேவையை எம்எல்ஏ தமிழரசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவருக்கும் அவர் தனது சொந்த செலவில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைத்தது, கிராம மக்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்