குடிபோதையில் ஆற்றைக் கடக்க முயன்ற நபர் - வெள்ளத்தின் நடுவே சிக்கிய போதை ஆசாமியை மீட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை அருகே குடிபோதையில் ஆற்றைக் கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் காப்பாற்றினர்.
குடிபோதையில் ஆற்றைக் கடக்க முயன்ற நபர் - வெள்ளத்தின் நடுவே சிக்கிய போதை ஆசாமியை மீட்ட பொதுமக்கள்
x
திருவண்ணாமலை அருகே குடிபோதையில் ஆற்றைக் கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை பொதுமக்கள் காப்பாற்றினர். ஆரணி அருகே பெய்த கனமழை காரணமாக கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. அப்போது குடிபோதையில் இருந்த குமரேசன் என்பவர் நாகநதி ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயன்றார். அப்போது திடீரென வெள்ளத்தில் சிக்கிய அவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட மக்கள், பல கட்ட முயற்சிக்கு பிறகு அவரை காப்பாற்றினர். இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்