தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் - ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் காலை 7 மணி முதலே நீண்ட நேரம் காத்திருந்தும், குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
x
மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் காலை 7 மணி முதலே நீண்ட நேரம் காத்திருந்தும், குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். சேந்தக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்குத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 7 மணி முதலே 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் தடுப்பூசி கிடைக்காத மக்கள் சோகத்துடன் வீடு திரும்பினர். 


Next Story

மேலும் செய்திகள்