144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பறிமுதல் - காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை அதிரடி

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில், 144 கிலோ வெள்ளி கட்டிகள், நகைகள் மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
x
விசாகபட்டினத்தில் இருந்து கொல்லம் சென்று கொண்டிருந்த எக்பிரஸ் ரயில், காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த, சுமார் 1 கோடியே 5 லட்ச ரூபாய்  மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டி, நகைகள், மற்றும் 32 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த சதீஷ் குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகிய 4 பேரும் உடனடியாகக் கைது செய்யப்படனர். இவர்கள் நால்வரும் நகை வியாபாரிகள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்