"கொரோனா" இறப்பு சான்​றிதழ் - அரசுக்கு உத்தரவு

கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனாவால் பலியானவர்களுக்கு, கொரோனா காரணமாக பலியானதை குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும் வகையில், உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்