தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
x
ரயில் புறப்பட்ட போது இறங்க முற்பட்ட இளைஞர், எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுகிறார்.இதனை பார்த்தவுடன் பணியில் இருந்த ரயில்வே பெண் காவலர், இளைஞரை காப்பாற்ற முயல்கிறார்.தண்டவாளத்திற்குள் சிக்க இருந்த சமயத்தில், அவரை காப்பாற்ற பெண் காவலர் போராட்டம்..
சக காவலர் உதவி செய்ய முன்வர, இருவரும் இணைந்து இளைஞரை பத்திரமாக மீட்டனர்.இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தை பெற்ற நிலையில், நொடிபொழுதில் துரிதமாக செயல்பட்டு இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலரை உயர் அதிகாரிகள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.பின்னர் ரயில் நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கிக்கூறிய மஞ்சு, இளைஞரின் உயிரை காப்பாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.தான் இல்லாமல், அந்த இடத்தில் வேறு காவலர் இருந்தாலும் இதைதான் செய்திருப்பார்கள் என நெகிழும் மஞ்சு, பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ரயில் நிலையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், பயணிகள் ரயில்வே விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது ரயில்வே காவல்துறை...




Next Story

மேலும் செய்திகள்