வைகோ மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
x
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நக்கீரன் கோபால் கைதை கண்டித்து, வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அனுமதியின்றி போராடியதாக வைகோ மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்