வரும் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வரும் 9ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
x
இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட அக்கட்சியின் 
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ள அவர்கள், கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், உள்ளாட்சி தேர்தல் பணிகள், சசிகலா ஆடியோ விவகாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்