அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. உள் தமிழகத்தில் நிலவும்  மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை எதிர்பார்க்கலாம் எனவும்,  டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மீனவர்கள் நாளை மறுதினம் முதல் வரும் 9ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், 
லட்சத்தீவு, ஆந்திர, கேரளா, கர்நாடகா மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்