திருமண ஆசை காட்டி நகை, பணம் பறிப்பு - திருப்பூரை சேர்ந்த 5 பேர் கைது

திருமண ஆசை காட்டி கேரள இளைஞர்களிடம் நூதன முறையில் பணம், நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமண ஆசை காட்டி நகை, பணம் பறிப்பு - திருப்பூரை சேர்ந்த 5 பேர் கைது
x
திருமண ஆசை காட்டி கேரள இளைஞர்களிடம் நூதன முறையில் பணம், நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்துார் பகுதியை சேர்ந்தவர்  ராமகிருஷ்ணன். 32 வயதான இவர், திருமணத்துக்கு பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக கேரளாவில் வெளியாகும் பத்திரிகையில் மணமகள் தேவை எனகடந்த மார்ச் மாதம் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனிடையே திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஒருவர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராமகிருஷ்ணன் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தன் நண்பர் பிரவீன் என்பவரை அழைத்துக் கொண்டு காரில் பல்லடம் வந்துள்ளார். அப்போது தனக்கு போன் செய்தவரை தொடர்பு கொண்டார் ராமகிருஷ்ணன். அப்போது ஒரு வீட்டில் பெண் இருப்பதாக கூறி,  ராமகிருஷ்ணன் மற்றும் பிரவீனை அந்த நபர் உள்ளே சென்று உட்கார வைத்துள்ளார். அப்போது திடீரென ஒரு கும்பல் அதிரடியாக உள்ளே நுழைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரையும் கட்டிப் போட்ட அந்த கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 7 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது. இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் கேரளாவின் ஆலத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். செல்போன் எண் உள்ளிட்டவை வைத்து விசாரித்ததில் திருப்பூரை சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கு உடந்தையாக இருந்த பாலக்காடு விமல், திருப்பூரை சேர்ந்த பிரகாஷ் உட்பட 5 பேரை கைது செய்த கேரள தனிப்படை போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்