நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, கடந்த 2017-ம் ஆண்டு, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், இதனால்,
ஆணையத்தை முடிக்க உத்தரவிடக் கோரி, தொண்டன் சுப்பிரமணி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு,
விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி, ஏன் உத்தரவிடக் கூடாது என்பது குறித்து,
ஆறு வாரங்களில் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
Next Story
