11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போதைக்கு அடிமையான சிறுவன் வெறிச்செயல்

செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போதைக்கு அடிமையான சிறுவன் வெறிச்செயல்
x
செங்கல்பட்டு அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கபட்டினம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வியாபாரிக்கு 11 வயதில் மகள் இருந்தாள்.

கடந்த செவ்வாய் கிழமை தன் வீட்டிற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக சிறுமி இன்டர்நெட் ப்ரவுசிங் சென்டருக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமி வீடு திரும்பாத நிலையில் பதறிப்போன பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே அடுத்த நாள் காலை வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது. சம்பவத்தன்று சிறுமியை அந்த சிறுவன் அழைத்துச் சென்றதாக சிலர் கூறிய நிலையில் போலீசார் சிறுவனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். 

அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. தாய், தந்தை இல்லாத அந்த சிறுவன், தன் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. 

இந்த சூழலில் தான் சிறுமியை பார்த்த அவர், அவருடன் பேச்சு கொடுத்தபடி தனியே அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே அறிமுகமான அண்ணன் தானே என நினைத்துச் சென்ற சிறுமியை அந்த சிறுவன் திடீரென கட்டிப்பிடித்து அத்துமீறவே அதிர்ச்சியடைந்தார் அவர்...

கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியிடம் பலவந்தமாக சிறுவன் அத்துமீற முயற்சிக்கவே அதிர்ந்து போன சிறுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அருகே இருந்த கல்லை எடுத்து சிறுமியை கொடூரமாக தாக்கவே அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதெல்லாமே சிறுவன் உச்சகட்ட போதையில் செய்ததாகவும், செல்போனில் பார்த்த ஆபாச படங்களால் ஏற்பட்ட விளைவு என்பதையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

கிராமத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்