குடும்ப தகராறில் நடந்த விபரீதம் - கணவன், மனைவி தூக்கு போட்டு தற்கொலை
திருவண்ணாமலையில் குடும்ப தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி அருகே அர்ஜுனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மனைவி இந்துமதி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கண்ணன் ஜேசிபி ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை அதிகம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பிரச்சினை அதிகமாகவே இருவரும் ஒரே புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

