"வன ஆக்கிரமிப்பு; சட்ட நடவடிக்கை எடுங்கள்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன ஆக்கிரமிப்பு; சட்ட நடவடிக்கை எடுங்கள் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
"வன ஆக்கிரமிப்பு- சட்ட நடவடிக்கை எடுங்கள்"

வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோரின் அறிக்கை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. 
அதில், ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதி ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

அரசின் நடவடிக்கையில் திருப்தி அடைவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ரிசார்ட் கட்டிய குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவர் கவிதா தரப்பில், வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும், 

தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என வாதிடப்பட்டது. 

அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், மீட்கப்பட்ட வனப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். 

வனத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொருவர் மீதும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்