பள்ளியில் 23 இலவச மடிக்கணினிகள் மாயம் - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் இருந்து 23 இலவச மடிக்கணினிகளை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் இருந்து 23 இலவச மடிக்கணினிகளை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கக்கூடிய 35 விலையில்லா மடிக்கணினிகள்  வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில மாதமாக பள்ளி திறக்கப்படாத நிலையில் வேதியியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகளை காணவில்லை என்று பள்ளி தலைமையாசிரியை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம்  தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்