ஆளுநர் உரை மீதான விவாதம் : "உறுப்பினர்களின் அறிவுரைகளை ஏற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் அறிவுரைகளை தான் ஏற்றுக்கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
x
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் அறிவுரைகளை தான் ஏற்றுக்கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து, பதிலுரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை முதலமைச்சராக்கிய கொளத்தூர் தொகுதி மக்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். நீதி கட்சி ஆட்சி பொறுப்பேற்ற 100ஆவது ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய முதலமைச்சர், ஆளுநர் உரை ஒரு முன்னோட்டம் என்றார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்ட ஸ்டாலின், ஒரு துளியும் மக்களுக்கு சந்தேகம் வேண்டாம் என, கேட்டுக்கொண்டார். மேலும், ஆட்சிக்கு வந்த 49 நாட்களில் 75 ஆயிரத்து 546 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்