வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் : ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீசார் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், தமிழக அரசின் 10 லட்ச ரூபாய் நிவாரணம் போதாது என்றும், 50 லட்ச ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story