நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
x
நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தலாம் என்று கொள்கை வகுக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள 8 நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  இதில் 2 திட்டங்களுக்கு 2008ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மீதம் இருக்கும் 6 திட்டங்களான, தாமிரபரணி- கருமேனி ஆறு நம்பியாறு இணைப்பு திட்டம், காவிரி - அக்னி ஆறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு இணைப்பு திட்டம், பெண்ணை ஆறு - பாலாறு இணைப்பு திட்டம், மற்றும், வெள்ளாறு - சுவேதா நதி - போனேரி - காவிரி இணைப்புத் திட்டம், சோலையாறுப்பட்டி - அக்னி ஆறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி - கடானா - சித்தாறு - உப்போடை - கல்லாறு இணைப்பு திட்டம் போன்றவை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதமாக நிறைவேற்றப்படுவதால், நீர்வளம் குறைந்த பகுதிகளுக்கு, பாசன வசதி வழங்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்