"டாய்க்கத்தான் 2021" போட்டி - பங்கேற்பாளர்களுடன் பிரதமர் உரையாடல்
உள்நாட்டு பொம்மை தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் "டாய்க்கத்தான் 2021" என்ற போட்டியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடிய நிலையில், அதில் கோவை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்திக் முஹம்மதுவும் தேர்வு செய்யப்பட்டார். வீட்டில் இருந்தவாறே விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் வரலாற்று சின்னங்களை கண்டுகளிக்க உதவும் தனது தொழிற்நுட்பம் குறித்து அத்திக் முஹம்மது பிரதமருக்கு விளக்கிய நிலையில், அதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story