"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
x
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், எல்லாருக்குமான அரசு என்று கூறி கோவையை மட்டும் புறக்கணிப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கோவை மாநகர் புறக்கணிக்கபடவில்லை என்றும் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, கோவைக்கு எய்ம்ஸ் கொண்டு வர வலியுறுத்திய முதலமைச்சருக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்