தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
x
இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 29 ஆயிரத்து 924 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 189 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 386 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 15 ஆயிரத்து 281 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 61 ஆயிரத்து 329 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 





Next Story

மேலும் செய்திகள்