“மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்“ - “பணம் திரும்ப பெற நடவடிக்கை“

பப்ஜி மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது....
x
பப்ஜி மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.... 

பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
கூகுள் பே மூலமாக மதன் பலரிடம் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. 

யூட்யூப் சேனல்கள் மூலமாக கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த மதன், அதற்கு வருமான வரி கட்டவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது.

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 45 லட்ச ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு,  2 சொகுசு கார்கள், 

பல இலட்ச ரூபாய் மதிப்பில் தங்க, வைர நகைகளையும் மதன் வாங்கி குவித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதற்கெல்லாம் வருமான வரி கட்டாத நிலையில் வருமான வரித்துறைக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதனை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கான இமெயில் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

மேலும் செய்திகள்