சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகார் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு, மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
x
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை காவல் துறையினர், செங்கல்பட்டு கிளை சிறையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து ஜூலை 1- ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை உயர் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். சிவசங்கர் பாபாவுக்கு  மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்