தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 287 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
x
தமிழகத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 6 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது. 
கொரோனாவுக்கு ஒரே நாளில் 287 பேர் உயிரிழந்துள்ளா நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 835 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 67 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரத்து 860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், 89 ஆயிரத்து 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்