"குழந்தைகள் நலனில் கவனம் அவசியம்" - தாய், சேய் நல மருத்துவர்கள் அறிவுரை

குழந்தைகளுக்கான கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டில் வராத சூழலில் குழந்தைகளைப் பேணி காப்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்
x
குழந்தைகளுக்கான கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டில் வராத சூழலில் குழந்தைகளைப் பேணி காப்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை ஓய்வதற்கு முன்னரே மூன்றாம் அலை வரும் தயாராகுங்கள் என எச்சரிக்க தொடங்கிவிட்டது மருத்துவ உலகம்.மூன்றாவது அலையை எதிர்கொள்ள மாநிலங்கள் தயாராகி வரும் சூழலில், கொரோனாவிற்கு எதிராக முக்கிய ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படுகிறதுஎனினும் இந்தியாவில் இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராததால், குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் மருத்துவர்கள்.குழந்தைகளை பொதுவெளியில் விளையாட வைப்பதையும், வெளியே அழைத்து செல்வதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்