21 நகரங்களில் விமான சேவை அதிகரிப்பு - விமானங்களில் பயணிப்பவர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்ததையடுத்து, 21 நகரங்களுக்கு 104 விமானங்களின் சேவை அதிகரித்துள்ளது.
x
கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்ததையடுத்து, 21 நகரங்களுக்கு 104 விமானங்களின் சேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவல், குறைந்ததையடுத்து, தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி, ஐதராபாத், மும்பை, கோவை, பெங்களூரூ, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, அகமதாபாத், கவுகாத்தி, கொச்சி உள்ளிட்ட 19 நகரங்களுக்கு 51 விமானங்களில் ஆயிரத்து 921 பயணிகள் புறப்பட்டு சென்றனர். இதே போல், 21 நகரங்களில் இருந்து 53 விமானங்களில் 2 ஆயிரத்து 153 பேர் சென்னை வந்தனர். 104 விமானங்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்