உயர்நீதிமன்றத்திற்கு 44 அரசு தற்காலிக வழக்கறிஞர்கள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராக , 44 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை , தமிழக அரசு நியமித்துள்ளது.
x
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, 29 அரசு வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு, 15 அரசு வழக்கறிஞர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக தலைமை செயலாளர் வெ.இறையண்பு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே, 26 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர் .கடந்த இரு பட்டியலில் திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போதைய பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்