வரும் 11ஆம் தேதி கல்லணையை ஆய்வு செய்கிறார் முதல்வர்

வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின், கல்லணையை ஆய்வு செய்ய உள்ளார்.
x
வரும் 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.
கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் நவீனப்படுத்துதல், சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்த பின், முதலமைச்சர்  அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார்.
குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக கால்வாய்களை தூர்வாரும் பணிகளுக்காக 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார்.இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருவாரூர் செல்லும் அவர், தொடர்ந்து 12ஆம் தேதி மேட்டூர் அணைக்கு சென்று அங்கு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகிறார். பின்னர், பாசனத்திற்காக தண்ணீர திறந்து வைக்க உள்ளார். 







Next Story

மேலும் செய்திகள்